Posts
- Get link
- Other Apps
நீர்இன்று அமையாது உலகேனின் யார்யார்க்கும் வான் இன்றி அமையாது ஒழுக்கு. -திருக்குறள் தொண்டுகளில் சிறந்த தொண்டு நீர்நிலைகளை பராமரிப்பதுதான் நாம் அன்றாட பயன்பாட்டிற்கும் வாழ்வாதாரத்திருக்கும் உறுதுணையாக இருப்பது நாம் வாழும் பகுதியில் இருக்கும் நீர்நிலைகள்தான். நம்மை வாழ வைக்கும் கோவிலைவிட குளம், நீர்நிலைகளே சிறந்தது. அதை நாம் ஆக்கிரமிப்பு செய்யாமலும், அசுத்தம் செய்யாமலும் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொண்டால் 100 வருஷம் ஆரோக்கியத்துடன் நாம் வாழலாம். டாக்டர் APJ அப்துல்கலாம் ஐயா சொன்னதைப்போல் ஒவ்வொரு ஊரில் வசிக்கும் இளைஞர்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் நீர் நிலைகளை பராமரித்தாலே போதும். APJ ஐயா சொல்லிசென்ற VISION 2020 வென்றி பெரும். தண்ணீருக்காக கேரளத்து சகோதரர்களிடமும், கர்னாடக சகோதரர்களிடமும் நாம் பிச்சை கேட்டு சண்டை இடத்தேவை இல்லை..! இளைஞர்கள் முன்வந்தால் உங்களுக்கு உதவ நற்துணை அறக்கட்டளை நண்பர்களும், சபரி பசுமை அறக்கட்டளையும் தயாராக உள்ளது. உங்கள் பகுதியில் அரசு துறை சார்ந்த அனுமதி பெற வேண்டும் என்றல் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்த தகவலை அனைவருக்கும் பகிர்